பகைத்திறந்தெரிதல்

திருக்குறள்:
 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க 
மென்மை பகைவர் அகத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

மு.வ உரை:
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

ADVERTISEMENTS
Translation:
To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.

ADVERTISEMENTS
Explanation:
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.