பகைத்திறந்தெரிதல்

திருக்குறள்:
 தேறினும் தேறா விடினும் அழிவின்கண் 
தேறான் பகாஅன் விடல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பகைவரைப்பற்றி
ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு
வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும்
அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.

மு.வ உரை:
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து
தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத்
தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

ADVERTISEMENTS
Translation:
Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press.

ADVERTISEMENTS
Explanation:
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).