பகைத்திறந்தெரிதல்
திருக்குறள்:
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
ADVERTISEMENTS
தனது
பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக
யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக்
கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ
இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள்
ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
ADVERTISEMENTS
Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.
ADVERTISEMENTS
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).