பகைத்திறந்தெரிதல்

திருக்குறள்:
 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் 
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.

மு.வ உரை:
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

ADVERTISEMENTS
Translation:
The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.

ADVERTISEMENTS
Explanation:
The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.