பகைத்திறந்தெரிதல்

திருக்குறள்:
 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் 
பல்லார் பகைகொள் பவன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

மு.வ உரை:
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

ADVERTISEMENTS
Translation:
Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.

ADVERTISEMENTS
Explanation:
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.