பகைமாட்சி
திருக்குறள்:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
ADVERTISEMENTS
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
மு.வ உரை:
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம்
எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின்
பகைமை, பிறரால் விரும்ப்படும்.
ADVERTISEMENTS
Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.
ADVERTISEMENTS
Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.