இகல்
திருக்குறள்:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
ADVERTISEMENTS
ஒருவன்
தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத்
தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக்
கொள்வான்.
மு.வ உரை:
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும்
மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன்,
காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
ADVERTISEMENTS
Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.
ADVERTISEMENTS
At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.