புல்லறிவாண்மை

திருக்குறள்:
 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை 
செறுவார்க்கும் செய்தல் அரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

மு.வ உரை:
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

ADVERTISEMENTS
Translation:
With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring.

ADVERTISEMENTS
Explanation:
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.