பேதைமை

திருக்குறள்:
 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் 
கையொன்று உடைமை பெறின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்லது
கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும்
கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக
ஆகிவிடும்.

மு.வ உரை:
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

ADVERTISEMENTS
Translation:
When folly's hand grasps wealth's increase, 'twill be
As when a mad man raves in drunken glee.

ADVERTISEMENTS
Explanation:
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.