பேதைமை
திருக்குறள்:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
ADVERTISEMENTS
அறிவில்லாப்
பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப்
பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.
மு.வ உரை:
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
ADVERTISEMENTS
When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.
ADVERTISEMENTS
If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.