பேதைமை

திருக்குறள்:
 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் 
பேதை வினைமேற் கொளின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

மு.வ உரை:
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால்
(அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை
பூணுவான்.

சாலமன் பாப்பையா உரை:
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

ADVERTISEMENTS
Translation:
When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

ADVERTISEMENTS
Explanation:
If
the fool, who knows not how to act undertakes a work, he will
(certainly) fail. (But) is it all ? He will even adorn himself with
fetters.