கூடாநட்பு
திருக்குறள்:
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
ADVERTISEMENTS
வெளித்தோற்றத்திற்கு
நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன்
இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
மு.வ உரை:
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில்
இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு
சாகுமாறு நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை
இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே
அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.
ADVERTISEMENTS
'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.
ADVERTISEMENTS
It
is the duty of kings to affect great love but make it die (inwardly);
as regard those foes who shew them great friendship but despise them (in
their heart).