கூடாநட்பு

திருக்குறள்:
 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வெளித்தோற்றத்திற்கு
நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன்
இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க
வேண்டும்.

மு.வ உரை:
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில்
இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு
சாகுமாறு நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை
இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே
அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.

ADVERTISEMENTS
Translation:
'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.

ADVERTISEMENTS
Explanation:
It
is the duty of kings to affect great love but make it die (inwardly);
as regard those foes who shew them great friendship but despise them (in
their heart).