கூடாநட்பு

திருக்குறள்:
 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பகைவர்கள்
வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது
போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்.

மு.வ உரை:
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

ADVERTISEMENTS
Translation:
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.

ADVERTISEMENTS
Explanation:
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.