கூடாநட்பு
திருக்குறள்:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
ADVERTISEMENTS
பகைவர்கள்
வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது
போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்.
மு.வ உரை:
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
ADVERTISEMENTS
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.
ADVERTISEMENTS
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.