பழைமை
திருக்குறள்:
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
ADVERTISEMENTS
நண்பர்கள்
செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு
நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து
கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.
மு.வ உரை:
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும்,
கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது
பயனுள்ள நாளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர்
எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை
செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.
ADVERTISEMENTS
In strength of friendship rare of friend's disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.
ADVERTISEMENTS
To
those who understand that by which they should not listen to (tales
about) the faults of their friends, that is a (profitable) day on which
the latter may commit a fault.