பழைமை

திருக்குறள்:
 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க 
நோதக்க நட்டார் செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வருந்தக்
கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின்
காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மு.வ உரை:
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

ADVERTISEMENTS
Translation:
Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.

ADVERTISEMENTS
Explanation:
If
friends should perform what is painful, understand that it is owing not
only to ignorance, but also to the strong claims of intimacy.