நட்பாராய்தல்
திருக்குறள்:
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
ADVERTISEMENTS
ஊக்கத்தைச்
சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய
நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.
மு.வ உரை:
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க
வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக்
கொள்ளாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.
ADVERTISEMENTS
Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.
ADVERTISEMENTS
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.