நட்பு

திருக்குறள்:
 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அணிந்திருக்கும்
உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச்
சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத்
துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

மு.வ உரை:
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

சாலமன் பாப்பையா உரை:
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

ADVERTISEMENTS
Translation:
As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.

ADVERTISEMENTS
Explanation:
(True)
friendship hastens to the rescue of the afflicted (as readily) as the
hand of one whose garment is loosened (before an assembly).