நட்பு

திருக்குறள்:
 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நண்பனைத்
தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து,
அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து
கொள்வதே உண்மையான நட்பாகும்.

மு.வ உரை:
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல
வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன்
பகிர்வது நட்பு.

ADVERTISEMENTS
Translation:
Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps.

ADVERTISEMENTS
Explanation:
(True)
friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good)
way, and, in case of loss if shares his sorrow (with him).