படைச்செருக்கு

திருக்குறள்:
 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் 
வைக்கும்தன் நாளை எடுத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒரு
வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில்
தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து
ஒதுக்குவான்.

மு.வ உரை:
வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள்
முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த
நாள்களாகக் கருதுவான்.

ADVERTISEMENTS
Translation:
The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.

ADVERTISEMENTS
Explanation:
The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.