படைமாட்சி
திருக்குறள்:
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
ADVERTISEMENTS
போரில்
சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத
நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும்
இருக்க முடியாது.
மு.வ உரை:
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும்,
இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல்
முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம்
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது
நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு
மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.
ADVERTISEMENTS
In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.
ADVERTISEMENTS
Ancient
army can alone have the valour which makes it stand by its king at the
time of defeat, fearless of wounds and unmindful of its reduced
strength.