பொருள்செயல்வகை

திருக்குறள்:
 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.

மு.வ உரை:
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல்,
சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும்
கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

ADVERTISEMENTS
Translation:
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.

ADVERTISEMENTS
Explanation:
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.