அரண்
திருக்குறள்:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
ADVERTISEMENTS
போர்
முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல்
நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.
மு.வ உரை:
போர் முனையில் பகைவர் அழியும் படியாக
(உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச்
சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.
ADVERTISEMENTS
At outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day.
ADVERTISEMENTS
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.