அரண்

திருக்குறள்:
 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் 
பற்றற் கரியது அரண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

மு.வ உரை:
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த
இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை
ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

ADVERTISEMENTS
Translation:
A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.

ADVERTISEMENTS
Explanation:
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.