நாடு

திருக்குறள்:
 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 
அணியென்ப நாட்டிவ் வைந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மக்களுக்கு
நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய
பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.

மு.வ உரை:
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.

ADVERTISEMENTS
Translation:
A country's jewels are these five: unfailing health,
Fertility, and joy, a sure defence, and wealth.

ADVERTISEMENTS
Explanation:
Freedom
from epidemics, wealth, produce, happiness and protection (to
subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.