அவையஞ்சாமை

திருக்குறள்:
 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் 
நன்கு செலச்சொல்லா தார்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அறிவுடையோர்
நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச்
சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

மு.வ உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை:
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

ADVERTISEMENTS
Translation:
Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.

ADVERTISEMENTS
Explanation:
Those
who cannot agreeably speak good things before a good assembly are
indeed unprofitable persons inspite of all their various acquirements.