அவையஞ்சாமை
திருக்குறள்:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
ADVERTISEMENTS
அறிஞர்களின்
அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச்
சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து
கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில்
பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து
கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங்
கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும்
மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.
ADVERTISEMENTS
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.
ADVERTISEMENTS
(Ministers)
should agreeably set forth their acquirements before the learned and
acquire more (knowledge) from their superiors (in learning).