அவையறிதல்

திருக்குறள்:
 உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் 
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உணர்ந்து
கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர்
உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

மு.வ உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும்
அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும்
பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

ADVERTISEMENTS
Translation:
To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!.

ADVERTISEMENTS
Explanation:
Lecturing
to those who have the ability to understand (for themselves) is like
watering a bed of plants that are growing (of themselves).