அவையறிதல்
திருக்குறள்:
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
ADVERTISEMENTS
அறிவுத்திறனால்
பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால்,
அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
மு.வ உரை:
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம்
மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான
நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.
ADVERTISEMENTS
As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.
ADVERTISEMENTS
(For
a minister) to blunder in the presence of those who have acquired a
vast store of learning and know (the value thereof) is like a good man
stumbling (and falling away) from the path (of virtue).