அவையறிதல்
திருக்குறள்:
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
ADVERTISEMENTS
அறிவாளிகளுக்கு
முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள்,
அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும்
அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக
நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல்
அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள
அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும்
குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.
ADVERTISEMENTS
Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!.
ADVERTISEMENTS
Ministers
should be lights in the assembly of the enlightned, but assume the pure
whiteness of mortar (ignorance) in that of fools.