அவையறிதல்

திருக்குறள்:
 ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் 
வான்சுதை வண்ணம் கொளல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அறிவாளிகளுக்கு
முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள்,
அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும்
அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

மு.வ உரை:
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக
நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல்
அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள
அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும்
குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

ADVERTISEMENTS
Translation:
Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!.

ADVERTISEMENTS
Explanation:
Ministers
should be lights in the assembly of the enlightned, but assume the pure
whiteness of mortar (ignorance) in that of fools.