குறிப்பறிதல்
திருக்குறள்:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
ADVERTISEMENTS
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.
மு.வ உரை:
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை
அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல்
வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர்,
பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று
ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.
ADVERTISEMENTS
The men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man's revealing eye.
ADVERTISEMENTS
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.