குறிப்பறிதல்

திருக்குறள்:
 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் 
வகைமை உணர்வார்ப் பெறின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பார்வையின்
வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே
அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.

மு.வ உரை:
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம்
மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள்
சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

ADVERTISEMENTS
Translation:
The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye's swift varying moods to scan.

ADVERTISEMENTS
Explanation:
If
a king gets ministers who can read the movements of the eye, the eyes
(of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or
friendship.