குறிப்பறிதல்
திருக்குறள்:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
ADVERTISEMENTS
ஒருவரின்
முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய
ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.
மு.வ உரை:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை
உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக
பெற்றுக்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும்
கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத்
தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
ADVERTISEMENTS
Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.
ADVERTISEMENTS
The
king should ever give whatever (is asked) of his belongings and secure
him who, by the indications (of his own mind) is able to read those of
another.