மன்னரைச் சேர்ந்தொழுதல்

திருக்குறள்:
 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை 
விட்டக்கால் கேட்க மறை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிறருடன்
மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது
என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே
கேட்டுக்கொள்ள வேண்டும்.

மு.வ உரை:
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக்
கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய
வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக்
கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே
சொன்னால் கேட்டுக் கொள்க.

ADVERTISEMENTS
Translation:
Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!.

ADVERTISEMENTS
Explanation:
(When
the king is engaged) in secret counsel (with others), ministers should
neither over-hear anything whatever nor pry into it with inquisitive
questions, but (wait to) listen when it is divulged (by the king
himself).