மன்னரைச் சேர்ந்தொழுதல்
திருக்குறள்:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
ADVERTISEMENTS
தமக்கு
மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள்.
பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி
செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான
காரியமல்ல.
மு.வ உரை:
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள
விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின்
அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால்
மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள்
நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது
எவர்க்கும் கடினம்.
ADVERTISEMENTS
Who would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare.
ADVERTISEMENTS
Ministers
who would save themselves should avoid (the commission of) serious
errors for if the king's suspicion is once roused, no one can remove it.