தூது

திருக்குறள்:
 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
உறுதி பயப்பதாம் தூது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தனக்கு
அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன்
கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

மு.வ உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம்
சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு
நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

ADVERTISEMENTS
Translation:
Death to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king.

ADVERTISEMENTS
Explanation:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).