தூது

திருக்குறள்:
 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் 
வாய்சேரா வன்கணவன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஓர்
அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட,
குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

மு.வ உரை:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம்
சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான
செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க
வேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.

ADVERTISEMENTS
Explanation:
He
alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the
firmness not to utter even inadvertently what may reflect discredit (on
the latter).