தூது
திருக்குறள்:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
ADVERTISEMENTS
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.
மு.வ உரை:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல்
இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச்
செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும்
தூதரின் பண்பு.
ADVERTISEMENTS
Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.
ADVERTISEMENTS
The
qualifications of him who faithfully delivers his (sovereign's) message
are purity, the support (of foreign ministers), and boldness, with
truthfulness in addition to the (aforesaid) three.