தூது
திருக்குறள்:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
ADVERTISEMENTS
ஆற்றவேண்டிய
கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல
வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.
மு.வ உரை:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய
கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற
நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு
சொல்பவனே தூதருள் தலைமையானவன்.
ADVERTISEMENTS
He is the best who knows what's due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell.
ADVERTISEMENTS
He
is chief (among ambassadors) who understands the proper decorum (before
foreign princes), seeks the (proper) occasion, knows the (most
suitable) place, and delivers his message after (due) consideration.