தூது

திருக்குறள்:
 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
வென்றி வினையுரைப்பான் பண்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வேற்று
நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும்
தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

மு.வ உரை:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச்
செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக
விளங்குதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை
அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை
அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

ADVERTISEMENTS
Translation:
Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.

ADVERTISEMENTS
Explanation:
To
be powerful in politics among those who are learned (in ethics) is the
character of him who speaks to lance-bearing kings on matters of triumph
(to his own sovereign).