தூது
திருக்குறள்:
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
ADVERTISEMENTS
வேற்று
நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும்
தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.
மு.வ உரை:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச்
செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக
விளங்குதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை
அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை
அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
ADVERTISEMENTS
Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
ADVERTISEMENTS
To
be powerful in politics among those who are learned (in ethics) is the
character of him who speaks to lance-bearing kings on matters of triumph
(to his own sovereign).