வினைசெயல்வகை
திருக்குறள்:
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
ADVERTISEMENTS
தம்மைவிட
வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம்
எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக்
கொள்வார்கள்.
மு.வ உரை:
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர்
நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப்
பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர்
எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி
அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
ADVERTISEMENTS
The men of lesser realm, fearing the people's inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head.
ADVERTISEMENTS
Ministers
of small states, afraid of their people being frightened, will yield to
and acknowledge their superior foes, if the latter offer them a chance
of reconciliation.