வினைசெயல்வகை

திருக்குறள்:
 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் 
தீயெச்சம் போலத் தெறும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

மு.வ உரை:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை
இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும்
(ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

ADVERTISEMENTS
Translation:
With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.

ADVERTISEMENTS
Explanation:
When
duly considered, the incomplete execution of an undertaking and
hostility will grow and destroy one like the (unextinguished) remnant of
a fire.