வினைசெயல்வகை
திருக்குறள்:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
ADVERTISEMENTS
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மு.வ உரை:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை
இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும்
(ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
ADVERTISEMENTS
With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.
ADVERTISEMENTS
When
duly considered, the incomplete execution of an undertaking and
hostility will grow and destroy one like the (unextinguished) remnant of
a fire.