வினைத்திட்பம்
திருக்குறள்:
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
ADVERTISEMENTS
உருவத்தால்
சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது.
பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர
வேண்டும்.
மு.வ உரை:
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும்
சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின்
சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு
அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால்
பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
ADVERTISEMENTS
Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!.
ADVERTISEMENTS
Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.