வினைத்தூய்மை

திருக்குறள்:
 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் 
முடிந்தாலும் பீழை தரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.

மு.வ உரை:
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும்
விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள்
நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

ADVERTISEMENTS
Translation:
To those who hate reproof and do forbidden thing.
What prospers now, in after days shall anguish bring.

ADVERTISEMENTS
Explanation:
The
actions of those, who have not desisted from doing deeds forbidden (by
the great), will, even if they succeed, cause them sorrow.