வினைத்தூய்மை
திருக்குறள்:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
ADVERTISEMENTS
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில்
சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச்
செயல்களைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
ADVERTISEMENTS
Though troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view.
ADVERTISEMENTS
Those
who have infallible judgement though threatened with peril will not do
acts which have brought disgrace (on former ministers).