வினைத்தூய்மை

திருக்குறள்:
 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
நன்றி பயவா வினை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

மு.வ உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.

ADVERTISEMENTS
Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).