வினைத்தூய்மை
திருக்குறள்:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
ADVERTISEMENTS
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
மு.வ உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
ADVERTISEMENTS
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.
ADVERTISEMENTS
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).