சொல்வன்மை
திருக்குறள்:
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
ADVERTISEMENTS
மற்றவர்கள்
விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள்
கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
மு.வ உரை:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும்
போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின்
கொள்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க
விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம்
பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த
கொள்கை.
ADVERTISEMENTS
Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence.
ADVERTISEMENTS
It
is the opinion of those who are free from defects in diplomacy that the
minister should speak so as to make his hearers desire (to hear more)
and grasp the meaning of what he hears himself.