சொல்வன்மை

திருக்குறள்:
 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்  
வேட்ப மொழிவதாம் சொல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.

மு.வ உரை:
சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும்
கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும்
கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).

ADVERTISEMENTS
Translation:
'Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear.

ADVERTISEMENTS
Explanation:
The
(minister's) speech is that which seeks (to express) elements as bind
his friends (to himself) and is so delivered as to make even his enemies
desire (his friendship).