அமைச்சு
திருக்குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
ADVERTISEMENTS
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.
மு.வ உரை:
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும்
அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை
எடுத்துக்கூறல் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய
வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம்
கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர்
கடமையாகும்.
ADVERTISEMENTS
'Tis duty of the man in place aloud to say
The very truth, though unwise king may cast his words away.
ADVERTISEMENTS
Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.