அமைச்சு

திருக்குறள்:
 அறிகொன்று அறியான் எனினும் உறுதி 
உழையிருந்தான் கூறல் கடன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

மு.வ உரை:
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும்
அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை
எடுத்துக்கூறல் க‌டமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய
வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம்
கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர்
கடமையாகும்.

ADVERTISEMENTS
Translation:
'Tis duty of the man in place aloud to say
The very truth, though unwise king may cast his words away.

ADVERTISEMENTS
Explanation:
Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.