அமைச்சு
திருக்குறள்:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
ADVERTISEMENTS
அமைச்சருக்குரிய
ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப்
பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து
சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில்
காணப்படுவதாகும்.
மு.வ உரை:
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம்
உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும்
வல்லவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப்
பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல்
காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக்
கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
ADVERTISEMENTS
A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.
ADVERTISEMENTS
The
minister is one who can effect discord (among foes), maintain the
good-will of his friends and restore to friendship those who have
seceded (from him).