இடுக்கணழியாமை

திருக்குறள்:
 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் 
துன்பம் உறுதல் இலன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

மு.வ உரை:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

ADVERTISEMENTS
Translation:
He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.

ADVERTISEMENTS
Explanation:
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).